7 1 scaled
இலங்கைசெய்திகள்

திக்வெல்ல – ஹசரங்கவை கடுமையாக எச்சரித்த உப்புல் தரங்க

Share

திக்வெல்ல – ஹசரங்கவை கடுமையாக எச்சரித்த உப்புல் தரங்க

கிரிக்கெட் அரங்கில் எத்தகைய திறமையை வெளிப்படுத்தினாலும் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதை மனதில் கொள்ளுமாறு நிரோஷன் திக்வெல்லவுக்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுத் தலைவ உப்புல் தரங்க அறிவுறுத்தியுள்ளார்.

உப்புல் தரங்க தலைமையிலான தெரிவுக் குழுவினர் கிரிக்கெட் தலைமையகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஊடக சந்திப்பில் நிரோஷன் திக்வெல்லவின் ஒழுக்கம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உப்புல் தரங்க,

‘கிரிக்கெட் அரங்கில் எவ்வளவுதான் பிரகாசித்தாலும் ஓழுக்கம் கடைப்பிடிக்கப்படுவது அவசியம் என திக்வெல்லவுக்கு நாங்கள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளோம்.

இது வனிந்து ஹசரங்கவுக்கும் பொருந்தும். வனிந்து ஹசரங்க இரண்டு போட்டித் தடையுடன் தப்பித்துக்கொண்டது பெரிய விடயம்.

எனவே வருங்காலத்தில் ஹசரங்க பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார்.

இதேவேளை, குசல் ஜனித் பெரேரா சுகவீனமுற்றதாலேயே நிரோஷன் திக்வெல்லவை குழாத்தில் இணைத்துக்கொண்டதாக அவர் கூறினார்.

‘நிரோஷன் திக்வெல்ல ஒரு பதில் வீரர் மாத்திரமே. குசல் ஜனித் பெரேரா சுகவீனமுற்றதாலேயே அவரை குழாத்தில் இணைத்துக்கொண்டோம். ஆரம்பத் துடுப்பாட்டத்தில் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.

பெத்தும் நிஸ்ஸன்க உபாதைக்குள்ளாகி இருப்பதால் அவருக்கு பதிலாக அவிஷ்க பெர்னாண்டோவை ஆரம்ப விரராக இணைத்துள்ளோம்.

இளம் வீரர்களான லசித் குரூஸ்புள்ளே, ஷெவொன் டெனியல் ஆகிய இருவரும் எதிர்கால நட்சத்திரங்களாக வரக்கூடியவர்கள் என்ற கருத்து பரவலாக இருந்ததை சகலரும் அறிவர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அண்மைக்காலமாக அவர்கள் இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவருகின்றனர்.

அவர்கள் இருவரும் தங்களது குறைபாடுகளை நிவர்த்திசெய்துகொண்டு தொடர்ச்சியாக பிரகாசித்தால் அணிக்குள் ஈர்க்கப்படுவது உறுதி.

‘அவர்கள் இருவரில் ஒருவரையா, நிரோஷன் திக்வெல்லவையா குசல் பெரேராவுக்கு பதிலாக உள்வாங்குவது என நாங்கள் விரிவாக ஆராய்ந்தோம்.

ஆனால், அணித் தலைவர், பயிற்றுநர் ஆகிய இருவரும் நிரோஷன் திக்வெல்லவுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என விரும்பினர்.

தெரிவுக்குழுவினர் மாத்திரம் ஒரு தீர்மானத்தை எடுத்துவிட முடியாது. அணித் தலைவர், பயிற்றுநர் ஆகியோரது கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும்’ என உப்புல் தரங்க குறிபிட்டார்.

மேலும், தினேஷ் சந்திமாலை தாங்கள் ஒதுக்கவில்லை எனவும் அவர் கூறினார். சந்தர்ப்பம் வரும்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

Share
தொடர்புடையது
17510267070
சினிமாசெய்திகள்

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை குறித்த கேள்விக்கு…!வைரலாகும் KPY பாலா பதில்..!

“கலக்க போவது யாரு” என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேரை பெற்று...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 3
சினிமாசெய்திகள்

விஜய் – திரிஷா போட்டோ வைரல் ..எனக்கும் அவருக்கும் பல வருட பந்தம்..விளக்கமளித்த வனிதா

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவில் அறிமுகமான வனிதா விஜயகுமார், ஆரம்பத்தில் சினிமாவில் சில படம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் குறித்த கேள்விக்கு தகுந்த பதிலடி..! அருண் விஜயின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ், அதிரடி, க்ரைம் எனப் பலதரப்பட்ட கதைகள் உருவாகும் காலத்தில், 2015 ஆம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 1
சினிமாசெய்திகள்

மீண்டும் திரைக்கு வந்த “தடையற தாக்க”…!பல நினைவு கூறிய இயக்குனர் மகிழ் திருமேனி…!

தமிழ் திரையுலகில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “தடையற தாக்க” திரைப்படம், ரசிகர்களின் மனங்களில் ஒரு...