இளவாலை பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணின் 3/4 தங்கச் சங்கிலியினை அறுத்த குற்றசாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களையும் 7 நாட்கள் விளக்கமறியல் வைக்க மல்லாகம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை குற்ற தடுப்பு பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் சங்காணை மற்றும் வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
அவர்கள் இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்பபடுத்திய பொழுது விளக்கமறியளில் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment