rtjy 257 scaled
இலங்கைசெய்திகள்

புதிய கடவுச்சீட்டு விண்ணப்ப முறை தொடர்பில் அறிவித்தல்

Share

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் புதிய இணைய விண்ணப்ப முறையின் மூலம் 35,000 இணையம் மூலமான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், 3700 கடவுச்சீட்டுகள் மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்தார்.

கடந்த ஜூலை 20 வரை பெறப்பட்ட 35,145 இணையம் மூலமான விண்ணப்பங்களில் 28,959 விண்ணப்பங்கள் சாதாரண சேவைக்காகவும், 14 நாட்களுக்குள் அனுப்பப்படும் கடவுச்சீட்டுக்களுக்காக 6,186 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.

எனினும் 35,145 இணைய மூலமான விண்ணப்பங்களில், 16,869 விண்ணப்பதாரர்கள் மட்டுமே நியமிக்கப்பட்ட பிரதேச செயலக அலுவலகத்தில் தங்கள் கைரேகைகளை வைத்துள்ளனர்.

இந்தநிலையில் 3,712 கடவுச்சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட சில விண்ணப்பங்களில், கைரேகையை வைக்கத் தேவையில்லை என்றாலும், கடவுசீட்டுக்களில் கையொப்பம் இடப்பட வேண்டிய கட்டாயப் படிவமான கையொப்பமிடப்பட்ட ஆவணத்தை பலர் பதிவேற்றவில்லை.

எனவே தெளிவான கையொப்பத்துடன் ஆவணத்தை மீண்டும் பதிவேற்ற விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...