கௌரவமான முறையில் விலகுங்கள்! – சந்திரிகா வலியுறுத்து

chandrika kumaratunga

மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும்.”

– இவ்வாறு இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார பெண் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார்.

அத்துடன், ராஜபக்ச குடும்பமும் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் எனவும் அவர் இடித்துரைத்தார்.

” நான் குடும்ப அரசியலுக்கு எதிரானவள், குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் இல்லாத சூழ்நிலையில்தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன். அம்மா (ஶ்ரீமாவும்) அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்ற உறுதிமொழியை எனக்கு வழங்கியிருந்தார். குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு என்பதால்தான் மகனைகூட அரசியலில் இறக்கவில்லை.

கோட்டாபயவால் முடியாது. எனவே, அவர் கௌரவமாக பதவி விலக வேண்டும்.” – எனவும் சந்திரிக்கா தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version