jaffna university 5666 scaled
இலங்கைசெய்திகள்

யாழ். பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி மறுப்பு!

Share

யாழ். பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி மறுப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக 35 ஆவது பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கான அனுமதி கோரி முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தனவால் இக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா நிலைமைகளில் முன்னேற்றம் காணப்பட்டால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் 3 நாள்கள் நடத்துவதற்கு அனுமதி கோரி யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரால் கோரிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தனவால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,

நாட்டில் தற்போது கொரோனா அபாயம் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய அனைத்து விதமான ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தங்களின் கோரிக்கைக்கு அனுமதி வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.

எனினும் நாட்டில் கொரோனா நிலவரம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.

இருப்பினும் யாழ்.பல்கலைகழக 35 ஆவது பட்டமளிப்பு விழாவை ஒன்லைனில் நடத்தவதற்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
marriage5872 1667871504
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

New Project 3 20
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...

241009 Diego Garcia Tamils
அரசியல்இலங்கைசெய்திகள்

டியாகோ கார்சியாவில் இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை உறுதி: பிரித்தானியாவுக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்கும் நெருக்கடி!

இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்ததாக...

Screenshot 2025 12 18 075235
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச அறிவிப்புகள் சிங்களத்தில் மாத்திரம்: தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! – ஜனாதிபதிக்கு சம உரிமை இயக்கம் கடிதம்

அரசாங்கத்தின் அனர்த்த கால உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அரச அறிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாமை குறித்து...