IMG 20220725 WA0072
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சங்கானை விவசாயிகளால் ஆர்ப்பாட்டம்!

Share

டீசல், மண்ணெண்ணெய் மற்றும் செயற்கை உரம் என்பனவற்றை வழங்குமாறு கோரி சங்கானை பிரதேச செயலகம் முன்பாக விவசாயிகள் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

தமது விவசாயத்திற்கு தேவையான மண்ணெண்ணெய் மற்றும் டீசல் என்பவற்றை சீரான முறையில் விநியோகிக்குமாறும் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான பசளையினை சீராக விநியோகிக்குமாறு கோரி சங்கானை பிரதேச செயலகம் முன்பாக விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுடுபட்டனர்.

சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 12 விவசாய சம்மேளனங்களைச் சேர்ந்த விவசாயிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச செயலகத்தின் வெளிப்புற வாயிலில் இருந்து பிரதேச செயலாக வளாகம் வரை சென்ற போராட்டக்காரர்கள் அங்கு பிரதேச செயலரை சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினையும் கையெடுத்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட சங்கானை பிரதேச செயலர் திருமதி. பொ. பிரேமினி அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

விவசாயிகளது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அரசாங்க அதிபருக்கு அனுப்புவுள்ளேன். விவசாயிகளை பொறுத்தவரையில் ஒன்றரை மாதங்களாக மண்ணெண்ணெய் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு எந்தவொரு வழிமுறையும் காணப்படவில்லை.

மேலும் சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மூலம் சீரான எரிபொருள் விநியோக முறையினை பிரதேச செயலகத்தினால் செய்ய முடியாததன் காரணமாக அதனை பெற்றுக் கொடுப்பது சிரமமானது என நினைக்கிறேன். இதனை நான் அரசாங்க அதிபருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.

விவசாயிகளை பொறுத்தவரையில் எரிபொருள் என்பது விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ள இந்தக் காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது. எனவே அரசாங்க அதிபரிடம் இதுதொடர்பாக கலந்துரையாடி உரிய தீர்வினை வழங்க முடியும் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...