25 6848573303c6e
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அரங்கேறிய போர் குற்றங்கள்! ஜேர்மனியில் அநுரவுக்கு காத்திருக்கும் அழுத்தம்

Share

பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தமது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜேர்மன் வலியுறுத்த வேண்டும் என ஜேர்மனிக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிலிப் ஃபிரிஷ்(Philipp Frisch) கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளைய தினம் உத்தியோகபூர்வ விஜயமாக ஜேர்மன் செல்லவுள்ளார்.

இந்த நிலையில், ஜேர்மனிக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிலிப் ஃபிரிஷ் அறிக்கையொன்றின் ஊடாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு போருக்கு பின்னர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறலின் அவசியத்தை எடுத்துக்காட்டும் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன், சாட்சிய சேகரிப்பு செயல்முறையையும் நிறுவியுள்ளது.

எனினும், அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கமும் இதுவரையான செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் அதன் முந்தைய அரசாங்கங்களிடமிருந்து வேறுபட்டதாகத் தெரியவில்லை.

இதன்படி, போர்க்குற்றங்களில் தொடர்புடைய முன்னாள் சிரேஷ்ட அதிகாரிகளைப் பாதுகாத்து, பேரவையின் கோரிக்கைகளை நிராகரித்துள்ளது.

30 வருட யுத்தத்தின் போது, கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் அரச படைகள் பொதுமக்களைத் தாக்கியதுடன், சிலரை வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கியுள்ளன.

எனவே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜேர்மனி விஜயத்தின் போது, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தமது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அவரை ஜேர்மன் அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...