நாட்டில் சேகரிக்கப்பட்ட 150 மாதிரிகளில் 148 மாதிரிகள் டெல்டா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த மாதிரிகள் நாடு முழுவதும் கடந்த ஓகஸ்ட் மாத இறுதி வாரம் முதல் செப்ரெம்பர் முதல் வாரம் வரை சேகரிக்கப்பட்டவை ஆகும்.
அவற்றில் இரண்டு மாதிரிகள் அல்பா திரிபைக் கொண்டுள்ளன.
ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வை பேராசிரியர் நீலிகா மாளவிகே மற்றும் டாக்டர் சந்திம ஜீவந்தர ஆகியோர் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment