31 6
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு அறிவித்தல் அனுப்பிய டெல்லி மேல் நீதிமன்றம்

Share

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு அறிவித்தல் அனுப்பிய டெல்லி மேல் நீதிமன்றம்

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் பணியாளர் ஒருவரை துன்புறுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு டெல்லி மேல் நீதிமன்றம் அறிவித்தலை அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி அஜய் வர்மாவின் தகவல்படி, நிறுவனப் பணியாளர் ஒருவரை துன்புறுத்தியது தொடர்பாக தொழில்துறை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதே இந்த அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, உத்தரவை பிறப்பித்த தீர்ப்பாயம், பாதிக்கப்பட்டவருக்கு ஊதியம் மற்றும் அதன் விளைவான சலுகைகள் எதையும் வழங்கவில்லை.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் டெல்லி மேல் நீதிமன்றம், விமான நிறுவனம் தனது பதிலைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதியன்று விசாரணைக்கு வருகிறது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...