Parliament SL 2 1 1000x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

குறை நிரப்பு பிரேரணை விவாதம் எதிர்வரும் 8 இல்

Share

அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 5.30 மணிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2020ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளைகள் அன்றையதின விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (02) முற்பகல் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அதேவேளை, எதிர்வரும் 07ஆம் திகதி முற்பகல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 2022.04.09ஆம் திகதிய 2274/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி மற்றும் கடன் எல்லையை ஒரு ட்ரில்லியன் ரூபாவினால் உயர்த்துவதற்கு உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் என்பன விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன.

அதன் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விசேட அறிவிப்பொன்று முன்வைக்கப்படவிருப்பதுடன், அது குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் பி.ப 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

ஜூன் 09ஆம் திகதி இலங்கை மின்சாரம் திருத்தச்சட்டமூலம் (இரண்டாவது வாசிப்பு) மற்றும் பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன பி.ப 4.30 மணி வரை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.

அதன் பின்னர் பி.ப 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

அண்மையில் இடம்பெற்ற குழப்பமான சூழ்நிலையின் போது படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தொடர்பான அனுதாபப் பிரேரணையை ஜூன் 10ஆம் திகதி மு.ப 10 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதத்துக்கு எடுக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...