24 6611fd28e76fe
இலங்கைசெய்திகள்

சுங்க வரி செலுத்தத்தவறியுள்ள அரச நிறுவனங்கள்

Share

சுங்க வரி செலுத்தத்தவறியுள்ள அரச நிறுவனங்கள்

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 41 அரச நிறுவனங்கள் கடந்த வருடம் (2023) டிசம்பர் 31ஆம் திகதி வரை 58.6 பில்லியன் ரூபா சுங்க வரி செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01 மற்றும் 05 வருடங்களுக்கு இடையில் இந்த அரச நிறுவனங்களால் செலுத்தப்படாத சுங்க வரித் தொகை 1.61 பில்லியன் ரூபாவாகும்.

5 முதல் 15 வருடங்களுக்கு இடையில் 56.99 பில்லியன் ரூபா சுங்க வரிப் பணமாக ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கைத்தொழில் மற்றும் வர்த்தகம், சுகாதாரம், கல்வி, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி, பொருளாதார அபிவிருத்தி, அனர்த்த முகாமைத்துவம், மதம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கள் சுங்க வரி செலுத்த தவறியுள்ளன.

மேலும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு, துறைமுகங்கள், தேசத்தை கட்டியெழுப்புதல், கடற்றொழில், விளையாட்டு, மின்சாரம் மற்றும் எரிசக்தி, தொழில்சார் மற்றும் கைத்தொழில் பயிற்சி, மீள்குடியேற்றம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு, சுற்றுலா, போக்குவரத்து, சமூக சேவைகள், வெகுஜன ஊடகம், விவசாயம், கூட்டுறவு, நகர அபிவிருத்தி ஆகிய அமைச்சுகள் வரி செலுத்தவில்லை என கூறப்படுகின்றது.

இலங்கை இராணுவம், நிதியமைச்சு, பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியனவும் சுங்க வரி செலுத்த தவறியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...