tamilni 93 scaled
இலங்கைசெய்திகள்

அரசியல் பிளவுகளால் சிதறும் தமிழ் புலம்பெயர் குழுக்கள்!

Share

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஏறக்குறைய 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த காலகட்டத்தில் பெரும்பான்மையான சிங்களவர்களுக்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் இடையில் அரசியல் பிளவுகள் தோன்றியுள்ளதாக தெ டிப்ளொமெட் என்ற ஆசிய பசுபிக் அரசியல் நிலவரங்களை ஆராயும் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

அத்துடன் நீண்ட காலமாக இலங்கை அரசாங்கம் செய்த போர்க்குற்றங்களுக்காக நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரி வரும் தமிழ் புலம்பெயர் குழுக்களிடையேயும் அரசியல் பிளவுகள் ஆழமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்ததாக கூறி இலங்கை அரசாங்கத்தால் தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டிருந்த, ஒரு காலத்தில் அதிகாரம் பெற்ற தமிழ் குடை அமைப்பான உலக தமிழர் பேரவை, பௌத்த தூதுக்குழுவுடன் இணைந்து வெளியிட்ட இமாலய பிரகடனம் இந்த பிளவை அதிகரித்துள்ளதாக டிப்ளொமெட் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தமிழ் மக்கள் மத்தியிலும் பதற்றதை தோற்றுவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த பிரகடனம் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆவணத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பல நடவடிக்கைகளை பரிசீலிப்பதாக அவரும் உறுதியளித்துள்ளார். பிரகடனம் எளிமையானது மற்றும் ஆறு கருப்பொருட்களை பகுதிகளை உள்ளடக்கியது.

இருப்பினும், பிரச்சினைகளின் மிகவும் சர்ச்சைக்குரிய முக்கிய பகுதிகள் அதில் சேர்க்கப்படாமை, குறித்த பிரகடனம், தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற உந்துதல் பெற்ற அரசியல் சூழ்ச்சி என்று பலரும் விமர்சனம் வெளியிட்டுள்ளதாக டிப்ளொமெட் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...