நாட்டில் இன்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்றிரவு ஆளுங்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னரே இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை பராமரிப்பது ஆகியவை பொருத்தமானதாக இருப்பதால், பொது அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews