world bank 20220162151
இலங்கைசெய்திகள்

கடன் மறுசீரமைப்பு அவசியம்

Share
இலங்கை மற்றும் ஏனைய நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவைப்படுகிறது என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்தார் என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பெங்களூரு நகரில் இடம்பெற்ற ஜி 20  நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இலங்கையின் நிதி உத்தரவாதம், சாம்பியா புரிந்துணர்வு ஒப்பந்தம், கானா உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு, எத்தியோப்பியா மறுசீரமைப்பு ஆகிய தீர்வுகளை அடைய நாங்கள் ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும்,  உடன்பாடு ஏற்பட்டால் அடுத்த சில மாதங்களில் இவை அனைத்தும் செய்யப்படலாம் என்று தெரிவித்த அவர்,பிரச்சினைகள் மற்றும் நிலைப்பாடுகளை முன்வைக்கக்கூடிய ஒரு செயல்முறையை நாங்கள் கண்டுபிடிக்க விரும்புகிறோம் என்றார்.

பொது கட்டமைப்பின் குறைபாடுகளைப் பற்றி கலந்துரையாடுவதற்கு அரச மற்றும் தனியார் கடன் வழங்குபவர்களின் வட்டமேசை மாநாடு சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

பாரம்பரிய பணக்கார கடன் வழங்கும் நாடுகள், தனியார் கடனாளிகள் மற்றும் சீனாவை ஒன்றிணைத்து குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன்களை மறுசீரமைக்க ஜி 20 முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...

Woman Harassment
உலகம்செய்திகள்

சக பெண் விமானி மீது பாலியல் பலாத்கார முயற்சி: பெங்களூருவில் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயது விமானி ஒருவர், தான் வேலை செய்யும் விமான...