இலங்கை கடன் மறுசீரமைப்பில் சீனா உதவி
இலங்கைசெய்திகள்

இலங்கை கடன் மறுசீரமைப்பில் சீனா உதவி

Share

இலங்கை கடன் மறுசீரமைப்பில் சீனா உதவி

இலங்கையின் மிகப் பெரிய இருதரப்புக் கடன் கொடுனரான சீனா, சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வுக்கு முன்னர் இலங்கைக்கு கடன் மறுசீரமைப்பில் உதவும் என்று பீடிஐ தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள், வெளி மற்றும் உள் கடன்களான 41 பில்லியன் டொலர்களை மறுசீரமைப்பதற்கான சவால் எதிர்கொள்ளப்படும் நிலையில் சீனா இலங்கைக்கு உதவ உள்ளதாக பீடிஐ குறிப்பிட்டுள்ளது.

2.9 பில்லியன் டொலர்களில் இலங்கைக்கு அடுத்தக்கட்ட நிதியுதவியை வழங்குவதற்காக, இந்த ஆண்டு செப்டம்பர் 11 முதல் 19 வரையான காலத்தில் சர்வதேச நாணய நிதியம் அதன் முதல் மதிப்பாய்வை நடத்த உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வுக்கான நிபந்தனையை பூர்த்தி செய்ய இலங்கை தற்போது அதன் வெளி கடனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் ஜூன் மாத இறுதி வரை நிகழ்ச்சித் திட்டத்தின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, முதல் மதிப்பாய்வில் நிர்வாகக் குழு மற்றும் பணியாளர்கள் இருவராலும் அங்கீகரிக்கப்பட்டால், இலங்கைக்கு சுமார் 338 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்றும் பீடிஐ தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...