ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது.
குறித்த விவாதத்தை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறுகின்றது.
இது தொடர்பில் விவாதம் நடத்துவதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை எதிரணியால் முன்வைக்கப்படவுள்ளது.
#SrilankaNews
Leave a comment