அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் அரசு கட்சி வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்!!

Share
image 4e82ab4f19
Share

தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, வேட்பாளர் அற்புதம் சற்குணதாஸ் தெரிவித்தார்.

இவர், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் அரசு கட்சி சார்பில் போட்டியிடுகின்றார்.

திடீர் மரணவிசாரணை அதிகாரியும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய இவர்   முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை இன்று (30) நடத்தினார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புனிதவளன் நகர் வட்டாரத்தில் போட்டியிடுகின்றேன். தான் தேர்தலில் போட்டியிடுவது பல கட்சியினருக்கு விருப்பமில்லாத சூழ்லிலை காணப்படுகின்றது அதனால் தன்மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன. 1970 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து தமிழ்த் தேசியத்தினை நேசித்தவன் அன்றில் இருந்து இன்றுவரை இலங்கை தமிழ் அரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் பயணித்தவன் என்றார்.

தேர்தல் வேட்பாளராக அறிமுகமான பின்னர் கடந்த 25 ஆம் நாள் வரை தொலை பேசியில் இரண்டு தடவைகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். வெளியில் வந்தால் கொலை செய்வோம் என்று தொலைபேசியின் ஊடாக  கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்றார்.

அவர்களின் தோல்வி பயம் காரணமாக இந்த மிரட்டல்களை அவர்கள் விடுகின்றார்கள். இந்த மிரட்டல் தொடர்பில் கடந்த 25.01.2023 அன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...