24 663449b35d120
இலங்கைசெய்திகள்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் சடலம் மீட்பு

Share

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் சடலம் மீட்பு

அனுராதபுரம் – கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நெல்லியாகம, பலகல, கல்கிரியாகம என்ற இடத்தில் வசித்து வந்த வஹாப்தீன் அமீன் முனவ்பர் என்ற 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்த மரணம் தொடர்பான உண்மைகள் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

அத்துடன், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு, சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவிற்கமைய, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையை மேற்கொண்டு மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என குறிப்பிட்டுள்ளார்.

கல்கிரியாகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ருக்மல் ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் அதிகாரிகள் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...