இலங்கைசெய்திகள்

சஷீ வீரவங்சவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு

Share
29 3
Share

சஷீ வீரவங்சவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் சஷீ வீரவங்சவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு பிரதிவாதியான சஷீ வீரவ்ங்ச சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தி்ல் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

எனினும் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதவான் ஹர்சன கெகுலாவள, குறித்த வேண்டுகோளை நிராகரித்துள்ளதுடன் எதிர்வரும் ஜனவரி 28ம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள முன்னாள் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா உள்ளிட்ட சாட்சிகளுக்கும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...