29 3
இலங்கைசெய்திகள்

சஷீ வீரவங்சவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு

Share

சஷீ வீரவங்சவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் சஷீ வீரவங்சவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு பிரதிவாதியான சஷீ வீரவ்ங்ச சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தி்ல் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

எனினும் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதவான் ஹர்சன கெகுலாவள, குறித்த வேண்டுகோளை நிராகரித்துள்ளதுடன் எதிர்வரும் ஜனவரி 28ம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள முன்னாள் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா உள்ளிட்ட சாட்சிகளுக்கும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...