images 2 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தம்மிக்க இராஜினாமா!!

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான தம்மிக்க பெரேரா, எம்.பி. பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மொட்டு கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச, எம்.பி. பதவியை துறந்த பின்னர் ,அந்த இடத்துக்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார். அவருக்கு அமைச்சு பதவியும் வழங்கப்பட்டது.

அதன் பின்னர், கோட்டா ஆட்சியில் பிரதமராக செயற்பட்ட ரணிலை அவர் கடுமையாக விமர்சித்தார். ரணிலிடமிருந்து நிதி அமைச்சு பதவி பறிக்கப்பட வேண்டும் எனவும் தம்மிக்க பெரேரா வலியுறுத்தினார்.

கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு ஓடிய பின்னர், அமைச்சு பதவியை அவர் துறந்தார். தற்போது ரணில் ஜனாதிபதியாகியுள்ளார். இந்நிலையிலேயே எம்.பி. பதவியை துறக்க திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...