நடிகை தமிதாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

24 661f74d3f3642

நடிகை தமிதாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு ஏப்ரல் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இருவரும் அழைத்து வரப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு அனுப்புவதாக கூறி 100 கோடி மோசடி செய்தமை தொடர்பில் கடந்த (04.04.2024) ஆம் திகதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆம் (05) திகதி இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமையையடுத்து இன்று (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version