VideoCapture 20201216 111514
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்.மாநகர சபை வேட்பாளராக சிறில்

Share

யாழ்.மாநகர சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறில் தெரிவாகியுள்ளார்.

நேற்றுக் காலை தமிழ் அரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களுடனான கலந்து ரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்.

ஏற்கனவே முதல்வராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் அந்தப் பதவியில் இருந்து விலகியதை அடுத்து முன்னர் முதல்வராக இருந்து பதவி இழந்த இ.ஆர்னோல்ட் மீண்டும் முதல்வரானார். ஆயினும் அவர் சமர்ப்பித்த வரவு- செலவுத் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் அவர் பதவி இழந்தார்.

இந்நிலையில் மீண்டும் இடம்பெறும் முதல்வர் தெரிவுக்கு இம்முறை சொலமன் சிறில் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவு எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறும்.

எதிர்வரும் 19ஆம் திகதி உள்ளூராட்சிச் சபைகள் அனைத்தும் கலைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...