24 664ec3523dd8d
இலங்கைசெய்திகள்

வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம்

Share

வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம்

தற்போது வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் உருவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய மேற்கு -மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் நேற்றிரவு தாழமுக்க நிலையொன்று உருவாகியுள்ளது.

இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைந்து நாளை ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து, எதிர்வரும் 25ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சூறாவளிக்கு Oman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Remal (Pronounce as Re-Mal) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் 25ஆம் திகதியளவில் வடக்கு ஒரிசா அல்லது மேற்கு வங்கம் பகுதியினூடாக (பாலச்சூர் – கொல்கத்தா) ஊடறுத்துச் செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, இலங்கையின் தென்மேற்கு கடல் பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு அரேபிய கடற் பிராந்தியத்தில் காற்றானது மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், பலத்த மழையும் கடற் கொந்தளிப்பும் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீனவர் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் சிவப்பு நிறம் தீட்டப்பட்ட பிராந்தயங்களில் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் எனவும், திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்பை அவதானமாக செவிமடுத்து செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
23 64daf2fac3aa8
செய்திகள்இலங்கை

இலங்கையில் வரட்சியான வானிலை நீடிக்கும்: அதிகாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் நிலவும் என எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான வானிலை தொடரும் அதேவேளை, அதிகாலை வேளைகளில் பல மாகாணங்களில் பனிமூட்டமான...

mervin silva 1024x576 1
செய்திகள்அரசியல்இலங்கை

150 மில்லியன் ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக வங்கி அதிகாரிகள் சாட்சியம்!

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் வருமானத்திற்கு அப்பாற்பட்டுச் சொத்துக்களைக் குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக, முன்னாள் அமைச்சர்...

images 2 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தந்தை தூங்கியபோது கையிலிருந்து நழுவி விழுந்த 2 மாதக் குழந்தை பலி – தந்தை கைது!

அளுபோமுல்ல, படதொப துடுவ பிரதேசத்தில் தந்தையின் கைகளிலிருந்து தவறி விழுந்த இரண்டரை மாதக் குழந்தை, சிகிச்சை...

MediaFile 5 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி நீர் வெளியேற்றும் பணி ஆரம்பம் – நிலத்தை மாற்ற நீதிமன்றம் தடை!

யாழ்ப்பாணம் செம்மணி, சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள்...