24 664eeec664437
இலங்கைசெய்திகள்

சூறாவளி உருவாகும் சாத்தியம் – வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Share

சூறாவளி உருவாகும் சாத்தியம் – வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் உருவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நேற்றிரவு தாழமுக்கம் உருவாகியுள்ளது.

இந்த தாழமுக்கமானது வடகிழக்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைந்துஎதிர்வரும் 25ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியை உருவாக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்படவுள்ள குறிப்பட்ட சூறாவளிக்கு Oman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Remal (Pronounce as Re-Mal) எனும் பெயர் இதற்கு வழங்கப்படவுள்ளது.

வருகிற 25 ஆம் திகதி வடக்கு ஒரிசா அல்லது மேற்கு வங்கம் பகுதியினூடாக (பாலச்சூர் – கொல்கத்தா) செல்லலாம் எனவும் கூறப்படுகிறது.

நாட்டில் இன்று (23) அன்றும் சில நாட்களுக்கும் மி.மீ 100 அளவில் மழை எதிர்பார்க்கப்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேற்கு, சபரகமுவ, மத்தியம், வயம்பா, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் குளிர்ச்சியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

வடக்கு, மத்திய மத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வயம்பா மாகாணங்களில் 50 மற்றும் 60 க்கு இடைப்பட்ட காற்று வீசக்கூடியதாக இருக்கும் என்று வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...