images 2 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தந்தை தூங்கியபோது கையிலிருந்து நழுவி விழுந்த 2 மாதக் குழந்தை பலி – தந்தை கைது!

Share

அளுபோமுல்ல, படதொப துடுவ பிரதேசத்தில் தந்தையின் கைகளிலிருந்து தவறி விழுந்த இரண்டரை மாதக் குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ருசேலி கெயாஷா எனும் 2.5 மாதக் குழந்தை கடந்த ஜனவரி 7-ஆம் திகதி காலை, இரவுப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய தந்தை, அழுத குழந்தையைச் சமாதானப்படுத்த கைகளில் ஏந்தித் தாலாட்டியுள்ளார். அப்போது அதீத களைப்பு காரணமாக அவருக்குத் தெரியாமலேயே தூக்கம் ஏற்பட்டுள்ளது.

தந்தையின் பிடியிலிருந்து நழுவிய குழந்தை, சீமெந்து தரையில் தலை மோதி விழுந்துள்ளது. இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

குழந்தை உடனடியாக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே (LRH) சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. அங்கு மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

தலையின் வலது பக்கம் ஏற்பட்ட காயம் காரணமாக மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, இரத்தம் உறைந்தமையே மரணத்திற்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் பயம் காரணமாக விபத்து குறித்து மறைத்த தந்தை, பின்னர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று நடந்த உண்மைகளை ஒப்புக்கொண்டார். தனக்கு ஏற்பட்ட திடீர் தூக்கமே இந்த விபரீதத்திற்குத் தாளாத துயரத்தை ஏற்படுத்தியதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் தந்தை அளுபோமுல்ல பொலிஸாரால் நேற்று (18) கைது செய்யப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை எனத் தாய் தரப்பில் கூறப்பட்ட போதிலும், கவனக்குறைவாக இருந்தமை குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...