16 16
இலங்கைசெய்திகள்

இணைய குற்றவாளிகளால் குறிவைக்கப்படும் நபர்கள்: இலட்சக்கணக்கில் பணமோசடி

Share

இணைய குற்றவாளிகளால் குறிவைக்கப்படும் நபர்கள்: இலட்சக்கணக்கில் பணமோசடி

இலங்கையில் இணைய நிதிமோசடிகளில் சிக்கியவர்களில் பெரும்பான்மையானவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்படுகின்ற முதியவர்களுடன் போலியான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு இணையக்குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சீனா, இந்தியா, தாய்லாந்து போன்ற பல நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து தங்கியிருந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் அவர்களது குற்றங்களுக்கு ஆதரவாக இலங்கையை சேர்ந்த பலரும் செயற்பட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையக்குற்றவாளிகள் முன்னரே தயாரிக்கப்பட்ட பல்வேறு மொழிகள், அழைப்பு உரையாடல்கள், குறுஞ்செய்தி பரிந்துரைகள் ஆகியவற்றை தொடர்புடைய மோசடிகளுக்கு பயன்படுத்துகின்றமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட நடுத்தர மற்றும் முதியவர்களுடன் போலி உறவுகளை ஏற்படுத்தி, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பல்வேறு வழிகளில் பணத்தை வைப்புச்செய்ய தூண்டியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இவர்களின் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வரும் இணைய குற்றவாளிகள், கணக்கில் உள்ள பணத்தை இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாகவும் மூத்த விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...