tamilni 321 scaled
இலங்கைசெய்திகள்

மின்சார சபை ஊழியர்களின் கடனுக்கு வட்டி செலுத்தும் வாடிக்கையாளர்கள்

Share

மின்சார சபை ஊழியர்களின் கடனுக்கு வட்டி செலுத்தும் வாடிக்கையாளர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் கடன் வசதிகளுக்கான வட்டி, வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் மற்றும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்றவர்களுக்கு அனர்த்த மற்றும் அவசர கடன்வசதியாக 12 ஆயிரம் கோடி ரூபாய் மின்சார சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான வட்டித்தொகையில் மூன்றில் இரண்டு பகுதியை இலங்கை மின்சார சபையே செலுத்தி வருகிறது. எனினும் குறித்த தொகையை மின்பட்டியலின் வெவ்வேறு கட்டணப் பிரிவுகளின் கீழ் வாடிக்கையாளர்களிடம் இருந்து மின்சார சபை அறவிட்டுக்கொள்வதாக தற்போது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான தகவல் வெளியில் கசிந்துள்ள நிலையில் பொதுமக்கள் பெரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அதனையடுத்து குறித்த கடன் தொகையையும், அதற்கான வட்டியையும் மீளப் பெறுவதற்கான பொறிமுறை ஒன்றை உடனடியாக செயற்படுத்துமாறு மின்சார சபையின் அதிகாரிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....