IMG 20220514 WA0009
இலங்கைசெய்திகள்

தமிழர்கள் போராட்டம் தொடர்பில் தற்போதய போராட்டக்காரர்கள் சிந்திக்க வேண்டும்!! – லீலாதேவி தெரிவிப்பு

Share

தமிழர்கள் கடந்த காலங்களில் ஏன் அடக்கப்பட்டார்கள், வன்முறை ஏன் உருவாக்கப்பட்டது என்பது தொடர்பில் தற்போது போராடுபவர்கள் சிந்திக்க வேண்டும் – என வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்தார்.

சமகாலநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் எதுவுமே மாறப்போவது கிடையாது. வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு ஒரு நீதியும் காணப்படுகின்றது. ஆனந்த சுதாகரன் மற்றும் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு நடந்த விடயங்களில் இருந்து இதனை உணர்ந்துகொள்ள முடியும்.தற்போது தெற்கில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வடக்கு மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களை தென்னிலங்கை மக்களும் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர்.

தென்னிலங்கையில் கோட்டா கோ கம, மைனா கோ கம என போராட்டத்தில் ஈடுபவர்கள் வலிந்து
காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும். எமது உறவுகள் கையளிக்கப்பட்ட பின்னரே காணாமலாக்கப்பட்டவர்கள் என்பதை தென்னிலங்கை போராட்டக்காரர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.மறைமுகமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை மீட்டுத்தர உதவி செய்ய வேண்டும்.

தமிழர்கள் கடந்த காலங்களில் ஏன் அடக்கப்பட்டார்கள், வன்முறை ஏன் உருவாக்கப்பட்டது என்பது தொடர்பில் தற்போது போராடுபவர்கள் சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் வன்முறை ஏற்படாத வகையில் ஒரு சுய நிர்ணய உரிமையை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...