செய்திகள்இலங்கை

ஊரடங்கு விதிமுறை மீறல் – இலங்கையே முதலிடம்!!

Share
Ravi Kumudesh
Share

கொவிட் தொற்றுப் பரவலின் போது அதிக எண்ணிக்கையிலான முடக்கத்தை விதித்த நாடாகவும், முடக்க விதிமுறை மீறிய அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட நாடாகவும் இலங்கை மாறியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் கூறுகின்றன.

இவ் விடயம் தொடர்பில், சுகாதார தொழில் வல்லுநர்கள் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முடக்கம் ஒழுங்கான முறையில் இல்லாமல் நீண்ட காலத்துக்கு அமுல்படுத்தப்பட்டதால், ஊரடங்கு பற்றிய கருத்து பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

முடக்க காலத்தில் பி.சி.ஆர். மற்றும் பிற சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுகாதார அமைச்சும், அதிகாரிகளும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

முடக்கம் சரியாக அமுல்படுத்தப்படாததால் நாட்டை மீண்டும் திறக்கும்படி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்கள்.

ஒரு அறிவியல் ரீதியான முடக்கத்தை அமுல்படுத்தினால் மட்டுமே கொரோனாத் தொற்றைக் குறைக்க முடியும் – என்றுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...