28 1
இலங்கைசெய்திகள்

அலி சப்ரியின் கருத்துக்களுடன் உடன்பட மறுத்து வெளியிடப்பட்டுள்ள விமர்சனங்கள்

Share

அலி சப்ரியின் கருத்துக்களுடன் உடன்பட மறுத்து வெளியிடப்பட்டுள்ள விமர்சனங்கள்

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் (Ali Sabry) அறிக்கை ஒன்று தொடர்பில், விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்த் தலைமை தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மறுத்து வருவதோடு பொதுவான இலங்கை அடையாளத்தின் பாகமாக இருக்க மறுக்கிறது என்று அலி சப்ரி தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், சப்ரியின் அறிக்கை, சிங்கள பெரும்பான்மையினருடன் அதிகாரப் பகிர்வு உடன்படிக்கைக்கு செல்ல முயலும் தமிழர்களின் நீண்ட அரசியல் வரலாற்றைத் தவிர்த்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று விமர்சித்துள்ளது.

ஜி.ஜி பொன்னம்பலத்தின் 50:50 முன்மொழிவு. 1957 பண்டாரநாயக்க-செல்வநாயகம் மற்றும் 1965 டட்லி-செல்வநாயகம் ஒப்பந்தம் போன்ற அடுத்தடுத்த முன்மொழிவுகள் சிங்கள பௌத்த தேசியவாதிகளின் துண்டிக்கப்பட்ட மற்றும் நீடித்த எதிர்ப்பை எதிர்கொண்ட பின்னர் கைவிடப்பட்டன.

2009இல் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் 1,69,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்,

இந்தநிலையில் 2010 தேர்தலில், அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கு எதிராக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ந்தும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறது.

இதில் 2010ல் பொன்சேகாவையும், 2015ல் மைத்திரிபால சிறிசேனவையும், 2019ல் சஜித் பிரேமதாசவையும் ஆதரிப்பதும் உள்ளடங்கும் என்று ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இப்படி தொடர்ந்து ஆதரவளித்த போதிலும், 13வது திருத்தத்தின் கீழ் இராணுவமயமாக்கல், பொறுப்புக்கூறல் அல்லது அதிகாரப் பகிர்வில் தமிழர் தாயகம் குறையவில்லை என்றும் குறித்த சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...