Dayasiri Jayasekara 1
இலங்கைஅரசியல்செய்திகள்

அரசியல் தெரியாதவர்களின் விமர்சனங்கள் தேவையில்லை- தயாசிறி

Share

கூட்டணி அரசியல் கோட்பாடு தொடர்பில் தெளிவில்லாதவர்களால், முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளமாட்டோம்.

இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார்.

அரச தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களால், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் சொற்கணைகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இந்த அரசுடன் பேச்சு நடத்தியது, ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.

பேச்சுகளில் ஈடுபட்ட, ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட தலைவர்களின் கருத்துகள்தான் எமக்கு முக்கியம். அரசியல் தெரியாதவர்கள், கூட்டணி தொடர்பில் தெளிவில்லாதவர்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் எமக்கு அவசியமில்லை. அவை தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

அதேவேளை, உரத்துக்கான நஷ்டஈட்டை பொறுப்புக்கூறவேண்டியவர்களே வழங்க வேண்டும்.” எனவும் தயாசிறி குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...