வங்கிகளில் கடன் – சலுகை காலம் நீடிப்பு

center bank

வங்கிகளில் கடன் பெற்ற வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு சலுகை காலத்தை நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் சலுகையை எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதிவரை நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

கொரோனாப் பரவலால் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகது என கூறப்படுகிறது.

இது தொடர்பில் வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சுற்றுநிருபத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version