செய்திகள்இலங்கை

கொவிட் நோயாளர்கள் தப்பியோட்டம் – 32 பேருக்கு தொற்று உறுதி!

Share
884255 corona deaths
Share

வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த மூவர் சுகயீனம் காரணமாக வவுனியா மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனினும் குறித்த மூவரும் மருத்துவமனையில் தங்கிச்செல்லாமல் தப்பிச்சென்றிருந்தனர்.

இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்ட சுகாதாரப் பிரிவினர் குறித்த கிராமத்தில் தேடுதல் நடத்தி ஏழு பேரை தனிமைப்படுத்தியிருந்தனர் எனினும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதனை பின்பற்றாது வெளியில் சுற்றித்திரிந்துள்ளனர்.

இது தொடர்பில் சுகாதாரப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த கிராமத்தை சேர்ந்த 150 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 32 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
2 11
இலங்கைசெய்திகள்

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை

திருகோணமலை மாவட்டத்துக்கான அனைத்து முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள்...

2 12
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன....

2 9
இலங்கைசெய்திகள்

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில்..

கொடபொல பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – கொடபொல பிரதேச...

2 10
இலங்கைசெய்திகள்

புத்தளம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்…

புத்தளம் – வென்னப்புவ பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் –...