24 6694898c21328
இலங்கைசெய்திகள்

19ம் திருத்தச் சட்டம் குறித்த மனு தாக்கல் ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூறாகாது: பெபரல் அமைப்பு

Share

19ம் திருத்தச் சட்டம் குறித்த மனு தாக்கல் ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூறாகாது: பெபரல் அமைப்பு

19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு ஜனாதிபதி தேர்தல் நடத்தும் காலத்தில் தாக்கம் செலுத்தாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெபரல் அமைப்பு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

19ம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதன் மூலம் அரசியல் அமைப்பு மீறப்படும் என தீர்ப்பளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த மனு, ஜனாதிபதி தேர்தல் நடத்துவதனை காலம் தாழ்த்தப்படுவதற்கு ஏதுவாகாது என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த மனுவின் ஊடாக 19ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயகம் குறித்த மக்களின் நம்பிக்கையை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயகம் குறித்து மக்கள் மத்தியில் நிச்சயமற்றத்தன்மையை உருவாக்க முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டுமென ரோஹன ஹெட்டியாரச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...