3 10
இலங்கைசெய்திகள்

ஹம்பாந்தோட்டையில் அதிகாலையிலேயே இரட்டை கொலைகள்! தீவிர விசாரணையில் பொலிஸார்

Share

ஹம்பாந்தோட்டை,ஹங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (07) அதிகாலையில் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்ட தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த ஆணும் பெண்ணும் 28 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் ரன்ன மற்றும் திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முகத்தை மறைத்த நிலையில் சுமார் ஐந்து பேர் கொண்ட குழு வீட்டிற்குள் நுழைந்து கூர்மையான ஆயுதங்களால் அவர்களைத் தாக்கியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நீதவான் விசாரணைக்காக சடலங்கள் சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பில் உள்ளன.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...