வே.இராதாகிருஷ்ணன் 55
இலங்கைசெய்திகள்

‘பார் கொத்தணியால் மயானம் நோக்கி நாடு! – ராதாகிருஸ்ணன் விளாசல்

Share

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளைத் திறந்து மக்களை கூட்டம் கூட்டமாக ஒன்றுகூட விட்டமையானது நாட்டு மக்களை விரைவில் சுடுகாடு நோக்கி அழைத்து ஒட்டுமொத்த நாட்டையும் சுடுகாடாக மாற்றும் அரசின் செயலாகும் .

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க போராடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு மிகப்பெரிய விளைவை சந்திக்கவுள்ளது.

நாட்டு மக்களை கொரோனா அரக்கனிடம் பலி கொடுக்க அரசு தயாராகிவிட்டது.

ஊரடங்கை அடுத்த மாதம் வரை நீடித்து திடீரென மதுபானசாலைகளை திறந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அரசு.

அனைத்து நகரங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக மதுபானங்களை பெறுகின்றனர். இதன் தாக்கம் இன்னும் சில நாள்களில் தெரியவரும்

அத்தியாவசிய பொருள்களை வாங்க சென்றவர்களை அடித்து துரத்தும் சுகாதாரத் தரப்பினர் இன்று மதுபான போத்தல்களை வாங்கும்போது வேடிக்கை பார்த்து கை கட்டிக்கொண்டு நிற்கின்றனர்.

இன்னும் சில நாள்களில் பார் கொத்தணி உருவாக வாய்ப்பை ஏற்படுத்தி நாட்டை சுடுகாடாக மாற்ற அரசு எத்தணிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...