sajith 3
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடு பாதாளத்தை நோக்கி! – எச்சரிக்கிறார் சஜித்

Share

உற்பத்திப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தொழில்முனைவோர் மற்றும் வணிகங்களை அரசுடமையாக்கினால் நாடு மேலும் வங்குரோத்தாகிவிடும் என்றும் இந்த வகையில் எந்த நாடும் அபிவிருத்தியடையவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் த புளூ பிரின்ட் பொருளாதார மாநாட்டின் மற்றுமொரு கட்ட மாநாடு திங்கட்கிழமை (27) குருநாகல் மாவட்டத்தை இலக்காக் கொண்டு குருநாகலில் இடம்பெற்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தை ஆள்பவர்கள் நாட்டு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை சார்ந்து தற்காலிக பொறுப்பாளர்களாக இருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு நாடு தங்களுக்கு முழு உரித்தோடு எழுதித்தரப்பட்டு விட்டது என்ற போக்கில் பலர் நினைப்பதாகவும், இந்த தற்காலிக நிர்வாகப் பொறுப்பு தேர்தலின் பின்னர் மாறுபடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஓர் அரசியல்வாதிக்கு ஆட்சி நிருவாகத்தின் போது இரு வழிகளிலுமான விடயப்பரப்பு பற்றிய சிறந்த புரிதல் இருக்க வேண்டும் எனவும், அந்த புரிதல் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாக பிரயோகிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்குமான திறமை இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

யார் என்ன சொன்னாலும், ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் சந்தை சக்திகளை அடிப்படையாகக் கொண்ட மனிதநேய முதலாளித்துவத்தைப் பின்பற்றுவதாகவும், ஒரு நாட்டின் செல்வத்தை அரசால் அன்றி, தனியார் துறையாலையே உருவாக்க முடியும் எனவும், இவ்வாறு உருவாக்கப்படும் செல்வம் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

உற்பத்திப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தொழில்முனைவோர் மற்றும் வணிகங்களை அரசுடமையாக்கினால் நாடு மேலும் வங்குரோத்தாகிவிடும் எனவும், இந்த வகையில் எந்த நாடும் அபிவிருத்தியடையவில்லை என்றார்.

எனவே ஒரு மாயைக்குப் பின்னால் சென்று, அநாதரவாக வேண்டாம் எனவும், பொய் ஏமாற்று மாயைகளால் எமது நாடு வங்குரோத்தாகி போயுள்ளதாகவும் தெரிவித்த அவர், அதன் இரண்டாவது அத்தியாயத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்காதீர்கள் என்றும் தெரிவித்தார்.

அவ்வாறு நடந்தால் நாடு இன்னொரு பாதாளத்தில் விழும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நேரத்தில் நாட்டுக்கு சிறந்த ஆட்சியே தேவை என்றும், திருட்டு, ஊழல், மோசடிகளைத் தடுத்து நல்ல முதலீட்டுச் சூழலை உருவாக்க வேண்டும் எனவும், எந்த சூழ்நிலையிலும் நாங்கள் புன்னியத்திற்கு முதலீடுகளையோ அல்லது உதவிகளையோ பெறமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

இதற்கு பொருத்தமான சமூக பொருளாதார அரசியல் சூழல் உருவாக்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...