24 665419470cfb0
இலங்கைசெய்திகள்

இலங்கையிலுள்ள வளம் தொடர்பில் போட்டியில் உலக நாடுகள்

Share

இலங்கையிலுள்ள வளம் தொடர்பில் போட்டியில் உலக நாடுகள்

இலங்கையின் மூலோபாய சொத்துக்கள் மற்றும் வளங்கள் மீது உலகளாவிய கவனம் காலணித்துவ ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது.

இந்தவகையில் நாட்டின் கிராஃபைட் (graphite) துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான போட்டியில் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தற்போது குறித்த தொழில்துறையில் ஈடுபட்டுள்ள கனேடிய மற்றும் அவுஸ்திரேலிய நிறுவனங்களுக்கு மேலதிகமாக முன்னெடுக்கப்படும் புதிய முயற்சிகளாகும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, இலங்கையில் உயர்தர சிரை கிராஃபைட்டுக்கு வளமான வைப்புகள் உள்ளன.

அதிலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட குழிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், நாட்டில் கிராஃபைட் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய (India) அரசு மற்றும் புவியியல். சுரங்க ஆய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு இடையில் ஆழமான கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...