Vaccine Card
இலங்கைசெய்திகள்

கட்டாயமாகிறது கொரோனா தடுப்பூசி அட்டை!

Share

கொரோனா வைரஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டதற்கான உறுதிப்படுத்தல் அட்டை அத்தியாவசியமாகும் பிரதேசங்களின் பெயர்ப் பட்டியலை ஓரிரு தினங்களில் வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி அட்டையை கண்டிப்பாக்கும் சட்டம் ஏப்ரல் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை நாட்டில் ஒரு கோடி 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களென தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்திற்கும் அதிகமாகும் என்றும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்பதாக மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...