Vavuniya Death
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிணற்றில் நீராடச் சென்று உயிரிழந்த சிறுவனுக்கு கொரோனாவாம்!!

Share

வவுனியாவில் கிணற்றில் நீராடச் சென்று உயிரிழந்த சிறுவனுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா- கொக்குவெளிப் பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், அருகில் உள்ள, கிணற்றில் குளிக்கச் சென்ற போது, தவறி வீழ்ந்து கிணற்று நீரினுள் மூழ்கி உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில், கிராம மக்களின் முயற்சியால், கிணற்று நீர் வெளியில் இறைக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில், சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

இதனையடுத்து, சிறுவனுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்காரணமாக, சிறுவனின் சடலத்தை, சுகாதார நடைமுறைகளைப் பேணி எரியூட்டுவதற்கு, சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...