images 3
இலங்கைசெய்திகள்

இந்தியாவில் தீவிரமடையும் கோவிட் தொற்று! வேகமாக அதிகரிக்கும் நோயாளர்கள்

Share

இந்தியாவில் கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளா, மகாராஷ்ட்ரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கோவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் 1,147 பேரும் மகாராஷ்ட்ராவில் 424 பேரும் டெல்லியில் 294 பேரும் தமிழகத்தில் 148 பேரும் குஜராத்தில் 223 பேரும் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை இந்தியாவில் 07 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

தொற்றுநிலை மீண்டும் உயரும் நிலையில், பல மாநிலங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி, மற்றும் தடுப்பூசி தொடர்பான நடைமுறைகள் மீண்டும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஹொங்கொங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட் 19 மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுவதாவது, “கோவிட் 19 இன்னும் முழுமையாக நீங்கவில்லை. மக்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் தொற்றை கட்டுப்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...