images 3
இலங்கைசெய்திகள்

இந்தியாவில் தீவிரமடையும் கோவிட் தொற்று! வேகமாக அதிகரிக்கும் நோயாளர்கள்

Share

இந்தியாவில் கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளா, மகாராஷ்ட்ரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கோவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் 1,147 பேரும் மகாராஷ்ட்ராவில் 424 பேரும் டெல்லியில் 294 பேரும் தமிழகத்தில் 148 பேரும் குஜராத்தில் 223 பேரும் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை இந்தியாவில் 07 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

தொற்றுநிலை மீண்டும் உயரும் நிலையில், பல மாநிலங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி, மற்றும் தடுப்பூசி தொடர்பான நடைமுறைகள் மீண்டும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஹொங்கொங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட் 19 மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுவதாவது, “கோவிட் 19 இன்னும் முழுமையாக நீங்கவில்லை. மக்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் தொற்றை கட்டுப்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
23 6496dd9c83a26
செய்திகள்இலங்கை

பணவீக்க இலக்கை எட்டத் தவறிய மத்திய வங்கி: நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானம்!

பணவீக்க இலக்குகளை எட்டத் தவறியமை குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இலங்கை...

images 5 5
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கு நற்செய்தி: குறைந்தபட்ச ஊதியம் ரூ. 30,000 ஆக உயர்வு!

இலங்கையின் தனியார் துறை ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் துறை ஆணையாளர்...

image 9f98662118
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுநாயக்கவில் ஒரு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் மீட்பு: மலேசியாவிலிருந்து வந்த வர்த்தகர் கைது!

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுடைய “குஷ்” (Kush) போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்தி வர முயன்ற...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் 1.8 மில்லியன் ஊழியர்களுக்கு AI அச்சுறுத்தல்: கொள்கை ஆய்வுகள் நிறுவனம் (IPS) வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் பணிபுரியும் மக்களில் கணிசமானோர், குறிப்பாக உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உள்ளவர்கள், செயற்கை நுண்ணறிவின்...