இந்திய அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்திய அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி!!

Share

இந்திய அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கும் இடையிலான கலந்துரையாடல் புது டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இடம்பெற்றுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு முயற்சிகளுக்காக இந்திய வெளியுறவுத்துறை பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் குறிப்பாக,
கிழக்கு மாகாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான இணைப்பை அபிவிருத்தி செய்தல், திருகோணமலை கைத்தொழில் பூங்காவில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முன்னுரிமை அளித்தல், கிழக்கு மாகாணத்தில் மின்சாரம் இன்றி வாழும் 15,000 குடும்பங்களுக்கு இந்திய மானியத்தில் சோலார் பேனல்களை ஒதுக்கீடு செய்தல் மற்றும் பெண்கள் தலைமைதாங்கும் 15,0000 குடும்பங்களுக்கு உதவி வழங்குதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகளை மேம்படுத்துதல்
இதுமட்டுமன்றி கோனாஸ்வரம் கோவிலை அபிவிருத்தி செய்தல், இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய இலங்கை அகதிகளுக்கான வீட்டுவசதி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள், ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், கிழக்கு மாகாணம் மற்றும் தோட்டப் பகுதிகளில் கணினி மற்றும் விஞ்ஞான ஆய்வகத்துடன் கூடிய பாடசாலைகளை மேம்படுத்துதல், சிறிய நோயாளர் காவு வண்டி மூலம் தோட்டத் துறைக்கு சேவையாற்றுதல், மற்றும் மலையகத்தில் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

இந்த கலந்துரையாடல் இரு நாட்டு நட்புறவுகளை மேலும் மேம்படுத்தும் எனவும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான பங்களிப்புகளை இந்தியா வழங்கவுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...