825408982sri lankan parliament
அரசியல்இலங்கைசெய்திகள்

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுக!

Share

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் சுதந்திர மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து கலந்துரையாடுவதற்கு உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் குறித்த கடிதத்தில் கூட்டமைப்பு கோரியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டு விநியோகத்தை காலவரையறையின்றி ஒத்திவைக்கும் தீர்மானம் ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தல் என சுதந்திர மக்கள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கும், நிர்வகிப்பதற்கும் அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உச்ச சட்ட சபையின் பிரதிநிதிகளின் பொறுப்பு இருப்பதால், நிலையியற் கட்டளை 16ன் கீழ் பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...