825408982sri lankan parliament
அரசியல்இலங்கைசெய்திகள்

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுக!

Share

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் சுதந்திர மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து கலந்துரையாடுவதற்கு உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் குறித்த கடிதத்தில் கூட்டமைப்பு கோரியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டு விநியோகத்தை காலவரையறையின்றி ஒத்திவைக்கும் தீர்மானம் ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தல் என சுதந்திர மக்கள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கும், நிர்வகிப்பதற்கும் அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உச்ச சட்ட சபையின் பிரதிநிதிகளின் பொறுப்பு இருப்பதால், நிலையியற் கட்டளை 16ன் கீழ் பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...