24 66162fcf543ae
இலங்கைசெய்திகள்

மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் முடிவு

Share

மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் முடிவு

பண்டிகை க் காலத்தில் ஒன்பது வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

விலைக்கட்டுப்பாடு தொடர்பில் அதிகாரசபை மேலும் தகவல் வெளியிடுகையில்,

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை மிகவும் நியாயமாக விலையில் மக்கள் கொள்வனவு செய்யும் வகையில் ஒன்பது அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கோதுமை மா 189 முதல் 208 ரூபா வரையிலும், பருப்பு கிலோ 312 முதல் 327 ரூபா என விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோ 174 முதல் 214 ரூபா வரையிலும், சீன வெங்காயம் ஒரு கிலோ 298 முதல் 328 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

அத்துடன், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 349 முதல் 384 ரூபா வரையும் உலர் நெத்தலி (தாய்லாந்து) கிலோ ஒன்று 869 முதல் 955 ரூபா வரையிலும், காய்ந்த மிளகாய் 818 ரூபா முதல் 859 வரையும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை மேலும் குறிப்பிடுகிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...