இலங்கைசெய்திகள்

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

33 3
Share

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

அயர்லாந்து, ஸ்டோர்மாண்டில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில், தொடர் வெற்றியாளரான அயர்லாந்துக்கு எதிராக இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

முன்னதாக இரண்டு போட்டிகளுக்கு மாறாக, போட்டியின் முதல் இரண்டு பந்துகளில் இலங்கையின் அச்சினி குலசூரிய, அயர்லாந்தின் துடுப்பாட்ட வீராங்கனைகளான சாரா ஃபோர்ப்ஸ் மற்றும் ஏமி ஹன்டரை வெளியேற்றியதால், அயர்லாந்தின் துடுப்பாட்டம் தடுமாற்றம் அடைந்தது.

தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால், அயர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 122 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஏழாவது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் விஸ்மி குணரத்ன ஆட்டமிழந்தபோதும், அது இலங்கை அணியை அழுத்தத்துக்கு உட்படுத்தவில்லை.

இதனையடுத்து சாமரி அதபத்துவின் 48 ஓட்டங்களையும், ஹர்சிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்தநிலையில் மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரில் அயர்லாந்து அணி 2க்கு 1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...