நாடாளுமன்றில் குழப்பம்! – சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

721187541parliamnet5 1

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிரணி உறுப்பினர்கள், சபைக்குள் ‘கோ ஹோம் கோட்டா’ என கோஷமெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கை முடிடைந்த பின்னர், பிரதமரின் விசேட உரை ஆரம்பமானது. அவ்வேளையில் ஜனாதிபதியும் சபைக்கு வந்தார்.

பிரதமர் உரையாற்றிக்கொண்டிருக்கையில், எதிரணி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். கோ ஹோம் கோட்டா என கோஷமெழுப்பினர். இதனால் சபையில் அமளி, துமளி ஏற்பட்டது. கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் பிரதமர் உரையை தொடர்ந்தார்.

அவரின் உரையின் பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version