யாழ் பல்கலைக்கழக முன்றலில் மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நேற்றிரவு முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் “இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கு கரிநாள்” என குறிப்பிடப்பட்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் முன்பாக பிற்பகல் 5 மணி முதல் சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் 7.30 மணி அளவில் கோப்பாய் பொலிஸார் முச்சக்கரவண்டியில் குறித்த பதாகை கட்டப்பட்ட இடத்திற்கு வருகை தந்து பதாகையை கழற்றி முச்சக்கர வண்டியில் வைக்க முற்பட்டனர்.
பல்கலை மாணவர்கள் “எதற்காக பதாகையை கழற்றுகிறீர்கள்” என கேள்வி எழுப்பினர்.இந்த நிலையில் பொலிஸ் தலைமையகத்தில் இருந்து தங்களுக்கு இதனை அகற்றுமாறு பணிப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மாணவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதபட்ட நிலையில் மாணவர்கள் குறித்த இடத்திற்கு ஒன்றுகூட உங்களுக்கு பதாகை வேண்டுமெனில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தாருங்கள் என தெரிவித்து விட்டு, குறித்த இடத்திலிருந்து பொலிஸார் சென்றுள்ளனர் .
#SrilankaNews
Leave a comment