17 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் குழப்பத்தில் உள்ள வாக்காளர்கள்

Share

இலங்கையில் குழப்பத்தில் உள்ள வாக்காளர்கள்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்தநிலையி;ல் கருத்துக் கணிப்பை நடத்தி இந்தியாவில் நரேந்திர மோடியின் வெற்றியை முன்னறிவித்த சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று, இலங்கையில் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்தும் விரிவான மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அமெரிக்கர்களால் நடத்தப்படும் இந்த நிறுவனம இலங்கையில் (Sri Lanka) சுமார் 9.3 மில்லியன் பேரின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்து அவர்களின் கணக்கெடுப்பை நடத்தத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம், சமூக ஊடக போக்குகளை ஆய்வு செய்து, மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் தொடர்பிலான சதவீத மாற்றங்கள் குறித்து அதிகாரிகளுக்கு ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் அறிவிப்புகளை வழங்கி வருகிறது.

இந்தநிலையில் குறித்த நிறுவனத்தின் அண்மைய அறிக்கையில், மூன்று வேட்பாளர்களும் 25 சதவீதத்தை கூட எட்டவில்லை என்று கணித்துள்ளது.

விக்ரமசிங்க, அனுரகுமார மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய மூவரும் சராசரியாக 21 மற்றும் 22 வீத வாக்குகளை பேணி வருகின்றனர்

எனினும் தீர்மானிக்கப்படாத வாக்காளர்கள் 35 வீதத்திற்கு மேல் பட்டியலிடப்பட்டுள்ளனர்.அவர்களே இறுதி முடிவுக்கு உரித்துடையவர்களாக இருப்பார்கள்.

இதே நிறுவனம் இந்தியத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் வெற்றியை சரியாகக் கணித்துள்ளது,மோடி மகத்தான வெற்றியின் மூலம் ஆட்சிக்கு வர மாட்டார் என்று கூறியிருந்தது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...